Migraine: ஒற்றைத்தலைவலிக்கான காரணங்கள் :

0
60

மைக்ரேன் தலைவலி நோயாளிகள் எதனால் இந்த பிரச்சனை அதிகரிக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். ஒவ்வொருக்கும் இந்த தலைவலிக்கான ட்ரிகர் பாயிண்ட், அதாவது தூண்டுதல் காரணிகள் வெவ்வேறாக இருக்கும். ஆகையால், இந்த பிரச்சனை உள்ளவர்கள், தங்களுக்கு மைக்ரேன் தலைவலி ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பதை முதலில் கண்டறியவேண்டும். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

தூக்கமின்மை:

சிலருக்கு தூக்கம் வருவதில் பிரச்சனை இருக்கும். இப்படிப்பட்டவர்கள் நீண்ட நேரம் தூங்காமல் இருப்பதால் தலைவலி பிரச்சனை அதிகரிக்கத் தொடங்குகிறது. தூக்கமின்மை சோர்வு மற்றும் பலவீனத்திற்கு வழிவகுக்கிறது. உணவு சரியாக ஜீரணமாகாமல் உடலில் பலவிதமான பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். அத்தகைய சூழ்நிலையில், ஒற்றைத் தலைவலி பிரச்சனையும் அதிகரிக்கிறது.

கவலை மற்றும் மன அழுத்தம்:

இப்போதெல்லாம் அனைத்து நோய்களுக்கும் மூல காரணம், அதிகரிக்கும் கவலை மற்றும் மன அழுத்தமாக உள்ளது. இதன் காரணமாக ஒற்றைத் தலைவலி பிரச்சனையும் அதிகரிக்கிறது. சிலருக்கு வீட்டில் உள்ள சண்டை சச்சரவுகளாலோ அல்லது அலுவலக வேலையின் டென்ஷனாலோ தலைவலி வரும். ஒற்றைத் தலைவலிக்கு இவையும் காரணமாக இருக்கலாம்.

உடலில் அமிலத்தன்மை அல்லது வாயுத்தொல்லை:

சிலருக்கு உடலில் ஏற்படும் அமிலத்தன்மை பிரச்சனையால் ஒற்றைத் தலைவலி பிரச்சனையும் வரும். அத்தகையவர்கள் தலைவலி வரும்போது கண்டிப்பாக வாந்தி எடுப்பார்கள். அதன் காரணமாக அமிலம் வெளியாகி வலி குறைகிறது.

அதே சமயம் சிலருக்கு வயிற்றில் உருவாகும் வாயுப்பிரச்சனையால் தலைவலி வர ஆரம்பிக்கும். தலையில் வாயு அதிகரித்து வலி அதிகரிக்கிறது. அப்படிப்பட்டவர்கள் வாயுவை ஏற்படுத்தும் பதார்த்தங்களை சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். மேலும் வெறும் வயிற்றில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும்.

வழக்கமான இடையூறுகள்:

ஒற்றைத் தலைவலிக்கு ஒரு முக்கிய காரணம் வழக்கமான தொந்தரவுகளாகும். சிலருக்கு வாழ்க்கை முறை மாறியதால் மைக்ரேன் தலைவலி வர ஆரம்பிக்கும். அத்தகையவர்களுக்கு உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் இடையூறுகள், தூக்கமின்மை, அதிகரித்த கவலை மற்றும் மன அழுத்தம் அல்லது பயணம் போன்றவற்றால் கூட ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது.

அதிக வெயில் மற்றும் வெப்பம்:

கோடையில் ஒற்றைத் தலைவலி பிரச்சனை மிகவும் அதிகரிக்கிறது. கடுமையான சூரிய ஒளியில் வெளியே சென்றாலும் மைக்ரேன் தலைவலி பிரச்சனை தொடங்குகிறது. திடீரென்று கடும் வெயிலிலிருந்து ஏசி அறைக்குள்ளோ, அல்லது, ஏசி அறையிலிருந்து சூடான இடத்துக்கோ செல்வதாலும் ஒற்றைத் தலைவலி தொடங்குகிறது. இது தவிர அதிக வெப்பத்தாலும் தலைவலி பிரச்சனை அதிகரிக்கிறது.

ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள்:

– கடுமையான தலைவலி

– வாந்தி மற்றும் குமட்டல்

– தோலில் குத்தும் உணர்வு

– எரிச்சலான மனநிலை

– பேசுவதில் சிக்கல்

– கை கால்களில் கூச்சம்

– கண்களின் கீழ் கருவட்டங்கள்

– உடலில் பலவீனம்

– பார்வையில் இருண்ட புள்ளிகள் தெரிவது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here