இந்திய திரைப்படத்துறையின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே பிறந்த தினமான ஏப்ரல் 30-ம் தேதியை முன்னிட்டு, வருடந்தோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும். வருடந்தோறும் 12-வது தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில், நடிகர் சூர்யாவின் ‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளது.
தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில், ‘ஜெய்பீம்’ படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ராசாக் கண்ணு கதாபாத்திரத்தில், மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த மணிகண்டன் சிறந்த சிறப்பான நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் நடிகையும் பா ஜ க நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் அதிருப்தி தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ‘தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய் பீம் திரைப்படத்திற்கு, சிறந்த துணை நடிகருக்கான ராஜா கண்ணு கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டனுக்கு ராஜா கிடைத்துள்ளது. நிஜ வாழ்க்கையிலும், படத்திலும் ராஜா கண்ணு முக்கிய நாயகன், துணை வேடம் அல்ல. வாழ்த்துக்கள் மணிகண்டன்.அந்த கதாபாத்திரம் இல்லாத கதை இல்லை. துரதிர்ஷ்டவசமாக திரைப்பட நிறுவனம் அவரது பெயரை துணை பாத்திரப் பட்டியலில் சேர்த்துள்ளது.’ என்று பதிவிட்டுள்ளார்.