கவனமாக இருக்க வேண்டும்.. இலங்கையால் இந்தியாவின் பாதுகாப்பிற்கே ஆபத்து.. பறந்து வரும் வார்னிங்!
இலங்கையில் நடக்கும் கலவர சூழல் மற்றும் அரசியல், பொருளாதார பிரச்சனைகளால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு சிக்கல் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இலங்கையில் போராட்டத்திற்கு இடையில் நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்சே ராஜினமா செய்தார். அங்கு விலைவாசி கட்டுக்கடங்காத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது. இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி மோசமடைந்து வருவதால் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே உடனடியாக தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என தேசிய மக்கள் சக்தி கட்சி வலியுறுத்தியுள்ளது.