சண்டக்கோழி படத்தின் கதையை இயக்குனர் லிங்குசாமி, முதலில் நடிகர் விஜய்யிடம் தான் கூறினாராம். ஆனால் படத்தின் முதல் பாதியை மட்டும் கேட்ட விஜய், வேண்டாம் என கூறி மறுத்து விட்டாராம்.
அதன் பின்னரே அந்தக் கதையில் விஷால் நடித்து, சண்டக்கோழி படம் மாபெரும் வெற்றி பெற்றது. படத்தின் வெற்றிக்கு பின்னர் ஒருநாள் விஜய்யை சந்தித்த லிங்குசாமி, அந்தக் கதையை வேண்டாம்ன்னு சொல்லிட்டீங்களே என்று கூறி வருத்தப்பட்டாராம்.
அதற்கு விஜய் என்ன கூறினார் தெரியுமா? அதாவது, “அந்த கதைக்கு அந்த பையன் (விஷால்) தான் கரெக்ட்டான சாய்ஸ். திரையுலகிற்கு இப்படியொருவர் வரணும்னு இருக்கு” என்று கூறி புன்னகைத்து விட்டு சென்றாராம். நடிகர் விஷால் விஜய்யின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.